ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புப் பெற வசதி

ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்கும் விவசாயி ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com