"எச்.ஐ.வி.' கிருமியை அழிக்கும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும் "எச்.ஐ.வி.' கிருமியை அழிக்கும் மூலிகை மருந்தை தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் எஸ்.மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.
"எச்.ஐ.வி.' கிருமியை அழிக்கும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு

எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும் "எச்.ஐ.வி.' கிருமியை அழிக்கும் மூலிகை மருந்தை தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் எஸ்.மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை மூலிகை ஆராய்ச்சியாளர் எஸ்.மாதேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த நான் கடந்த 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு அடிப்படையாக விளங்கும் "எச்.ஐ.வி.' ஹெபடைடீஸ்-பி எனப்படும் எச்பிவி கிருமிகள் சமூகத்தில் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு காரணமாகியுள்ளன. குருதி, விந்து உள்ளிட்ட உடல் திரவங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் எச்ஐவி, எச்பிவி கிருமிகொல்லியை அழிக்கும் மூலிகையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டேன். குறிப்பாக 2008 முதல் 2011-ஆம் ஆண்டு நடத்திய ஆராய்ச்சியில், அஸ்வகந்தா மற்றும் வல்லாரை மூலிகைகளின் உதவியுடன் எச்ஐவி, எச்பிவி கிருமிகளை கொல்லும் மூலிகை அல்லது சித்தமருத்துவத்தைக் கண்டறிய முடிந்தது.

ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள டான்சாக்ஸ் ஆராய்ச்சி மையம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மும்பையின் ரெலிகேர் நிறுவனம் (ரான்பாக்ஸி) ஆகியவற்றின் ஆராய்ச்சிக் கூடங்களில் ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்துள்ள மூலிகை அல்லது சித்தமருந்து எச்ஐவி, எச்பிவி கிருமிகளை அழிக்கவல்லது என்பதை நிரூபித்துள்ளோம். இந்த மருந்துகளை மூன்று பேருக்கு மூன்று மாதங்கள் அளித்து எனது ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தியுள்ளேன். நான் கண்டுபிடித்துள்ள மூலிகை மருந்தை 3 மாதங்கள் உள்கொண்டால் எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுவதோடு, உயிரணுக்களில் உள்ள ஜீன்களின் அமைப்பியல், செயல்பாட்டியல் தன்மைகள் மேம்படும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகி நோயில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தின் விலை மாதத்துக்கு ரூ.100 மட்டுமே.

அதேபோல, இந்தியாவில் பெரும்பாலானோரை பீடித்திருக்கும் நீரிழிவு நோயை (டயாபட்டீஸ்-2 டைப்) குணப்படுத்தும் திரிபலா மற்றும் நன்னாரியைக் கொண்டு மூலிகை மருந்தை தயாரித்திருக்கிறேன். நீரிழிவு நோய்க்கு மூலக் காரணம் உடல் பருமன் மற்றும் மரபணு ஆகும். இதை சரிசெய்து நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரை பழைய நிலைக்கு அதாவது நீரிழிவு நோய் இல்லாத நிலைக்கு கொண்டுவர எனது புதிய மூலிகை மருந்தால் சாத்தியமாகும். 4 மாதங்கள் தினமும் ரூ.5 செலவில் மருந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துவிடலாம்.

எனது மருந்துகளை தயாரித்து சந்தையில் விடுவதற்கு பிரதமர் மோடியின் உதவியை நாடினேன். அவரது வழிகாட்டுதலில் சென்னையில் உள்ள தேசிய சித்தா மையத்திலும் எனது மருந்துகள் சோதித்தறியப்பட்டு, அது உண்மை என்று சான்றளித்துள்ளனர்.

எனவே, அடுத்தகட்டமாக எனது மருந்துகளுக்கு காப்புரிமை பெற முயற்சித்து வருகிறேன். கர்நாடக அரசு அல்லது ஏதாவது நிறுவனங்கள் முன்வந்து உதவினால், எனது மருந்தை மலிவான விலையில் கொடுத்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரை காப்பாற்றலாம் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com