எண்மத் துறையில் சிறந்து விளங்கும் கர்நாடகம்

எண்மத் துறையில் கர்நாடகம் சிறந்து விளங்குவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

எண்மத் துறையில் கர்நாடகம் சிறந்து விளங்குவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
 பெங்களூரில் வெள்ளிக்கிழமை புரோ டிஜிட்டல் பரிசோதனை மையத்தை எம்.எல்.ஏ பிரியாகிருஷ்ணா தொடக்கிவைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பிரியங்க்கார்கே பேசியது:
 எண்ம இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு அதிகம் ஊக்கம் அளித்து வருகிறது. கர்நாடக அரசும் எண்ம இந்திய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
 பெங்களூரில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும் வகையில் புரோ டிஜிட்டல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒளி, ஒலி சம்பந்தப்பட்ட துறைகளில் பல்வேறு மாற்றங்களை காண முடியும். நவீன தொழில்நுட்பத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், எண்ம தொழில்நுட்பத்தின் சாதனையாகும். தகவல், உயிரித் தொழில்நுட்பத்தை தொடர்ந்து எண்ம தொழில்நுட்பத்திலும் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது என்றார்.
 பிரியாகிருஷ்ணா எம்.எல்.ஏ பேசியது: எண்மத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் சிறந்து விளங்குவதற்கு புரோ டிஜிட்டல் பரிசோதனை மையமே சாட்சியாக விளங்குகிறது. இந்தத் துறையில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது என்றார்.
 நிகழ்ச்சியில் புரோ டிஜிட்டல் பரிசோதனை மையத்தின் மேலாண் இயக்குநர் தீபுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com