பெங்களூரில் பறக்கும் கேமராக்கள், பலூன்களுக்குத் தடை

சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரில் ஆக.13-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு மாநகரில் பறக்கும் கேமராக்கள், பலூன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரில் ஆக.13-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு மாநகரில் பறக்கும் கேமராக்கள், பலூன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் டி.சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் ஆளுநர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, மேயர் ஜி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சுதந்திர தின நிகழ்ச்சிகளை சீர்குலைக்க சதி வேலைகள் நடைபெறலாம் என சந்தேகிப்பதால், பெங்களூரில் ஆக. 13,14,15-ஆம் தேதிகளில் பறக்கும் கேமராக்கள், பலூன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com