பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 பேர் கைது

உறவினரைச் சந்திக்க பெங்களூரு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உறவினரைச் சந்திக்க பெங்களூரு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பெங்களூரில் உள்ள தனது உறவினரை சந்திக்க மற்றொரு பெண் உறவினருடன் வியாழக்கிழமை பெங்களூருக்கு வந்தார். அவர் சந்திக்க வந்த உறவினர் இல்லாததால் மீண்டும் சித்ரதுர்காவிற்கு செல்ல யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
 நள்ளிரவு 12 மணிக்கு ரயில் இருந்ததையடுத்து, உறவினர் பெண்ணுடன் அந்த இளம் பெண் ரயில் நிலையத்தில் தங்கியுள்ளார். இதனிடையே ரயில் நிலையத்திற்கு வந்த 3 பேர், பாதுகாப்புக்கு இருந்த உறவினர் பெண்ணை அச்சுறுத்தி, அவருடன் இருந்த மற்றொரு பெண்ணை அங்குள்ள கடைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர்.
 அப்போது, அப் பெண் கூச்சலிட்டதையடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் தப்பினர். அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர்பாஷா, அப் பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் விரைந்து செயல்பட்டு இளம் பெண் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற பியாஸ், ஜுப்பார்கான் ஆகியோரைக் கைது செய்தனர்.
 தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர். இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ஆட்டோ ஓட்டுநரை மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com