ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் பலி

சித்ரதுர்கா அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

சித்ரதுர்கா அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
 கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா ஹிரியூர் சூரகொண்டனஹள்ளியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (22), சரண்ராஜ் (22), மதுகரிபுராவைச் சேர்ந்த சிதானந்தா (20), கே.என்.கொட்டிகே பகுதியைச் சேர்ந்த மனு (20). இவர்கள் 4 பேரும் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆட்டோவில் ஹிரியூரிலிருந்து செல்லகெரேவிற்குச் சென்று கொண்டிருந்தனராம்.
 அப்போது, செல்லகெரேவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மோதியதில், ஆட்டோவிலிருந்த 4 பேரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.
 தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்ஜோஷி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து ஐமங்களா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com