பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொசுக் கடியிலிருந்து பாதுகாக்க களிம்பு மருந்து வழங்கப்படும் என டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் பிரஷாந்த் அகர்வால் பெங்களூரில் வியாழக்கிழமை பேசியது:
பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், மழையால் அது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதைத் தடுக்கும் வகையில், பெங்களூரில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கொசுக் கடியிலிருந்து பாதுகாக்கும் ஒடோமாஸ் களிம்பு மருந்தை வழங்க முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து பள்ளி கல்வித் துறையிடம் பேச்சு நடத்தப்படும். கொசுக் கடியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்றார்.