பெங்களூரு லால் பாக்கில் 10 நாள்கள் நடைபெற்ற சுதந்திர தின மலர்க் கண்காட்சியில் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ. 2.14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
லால் பாக் பூங்காவில் 206}ஆவது மலர்க் கண்காட்சி ஆக. 4}ஆம் தேதி முதல் 15}ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெற்ற இக் கண்காட்சியை 5.74 லட்சம் பேர் கண்டு களித்தனர். இதன்மூலம் கட்டணமாக ரூ. 2.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் தேசியக்கவி குவெம்புவின் இல்லத்தை நினைவுபடுத்தும் வகையில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த மாதிரி இல்லம் அனைவரையும் கவர்ந்தது.
இதனை காண பொதுமக்கள் மட்டுமன்றி, எழுத்தாளர்கள், சிந்தனையாளர் உள்ளிட்ட பலரும் கண்காட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியின் கடைசி நாளான சுதந்திர தினத்தன்று மலர்க் கண்காட்சியைக் காண 1.66 லட்சம் பேர் வந்தனர்.