சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனங்களைப் பயன்படுத்த வேண்டுகோள்

பெங்களூரு: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனங்களைப் பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை சாய்ரா ஆட்டோ நிறுவனத்தின் மயூரி மின் ஆட்டோவை அறிமுகம் செய்து அவர் பேசியது: தில்லி போன்ற நகரங்களில் அதிகரித்து வரும் வாகன மாசுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக வாகனங்கள் விளங்குகின்றன. எனவே, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் பெட்ரோல், டீசலை உபயோகிக்காத மின் வாகனங்களைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். 
சாய்ரா ஆட்டோ நிறுவனத்தின் மயூரி மின் ஆட்டோவின் மூலம் பெங்களூரில் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த முடியும். ஆட்டோவைத் தொடர்ந்து வரும் நாள்களில் மின் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com