மூதாட்டியிடம் வழிப்பறி

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு ஆவளஹள்ளி பிடிஏ பூங்கா அருகில் வசித்து வருபவர் இந்திரா (65). இவர் செவ்வாய்க்கிழமை மாலை ஆவளஹள்ளி 2-வது குறுக்குச்சாலை முதலாவது பிரதானசாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். 
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கழுத்திலிருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கிரிநகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com