நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்களூரு ஆவளஹள்ளி பிடிஏ பூங்கா அருகில் வசித்து வருபவர் இந்திரா (65). இவர் செவ்வாய்க்கிழமை மாலை ஆவளஹள்ளி 2-வது குறுக்குச்சாலை முதலாவது பிரதானசாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கழுத்திலிருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கிரிநகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.