மாலைநேர பாலிடெக்னிக்குகளில் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கான கடைசி தேதியை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் மாலைநேர பாலிடெக்னிக்குகளில் 2017-18-ஆம் ஆண்டில் வழங்கப்படும் பட்டயப் பயிற்சிக்கான (டிப்ளமோ) மாணவர் சேர்க்கையின் கடைசி தேதி டிச.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களின் நலன் கருதியும், காலியாக உள்ள பட்டயப் பயிற்சி வகுப்புக்கான இடங்களை நிரப்பவும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி இறுதித் தேர்வில் 35 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்கள் பட்டயப் பயிற்சியில் சேர தகுதியானவர்கள் ஆவர். மேலும், காலங்கடந்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தனிவகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டயப் பயிற்சியின் முதலாமாண்டு சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம். 2018 ஜன.3 முதல் 4-ஆம் தேதி சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.