கர்நாடகத்தில் ஏர்டெல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இணையதளச் சேவையில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் கர்நாடக வர்த்தகத் தலைவர் கன்வர்பிர்சிங் செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில் ஏர்டெல் செல்லிடப்பேசி இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணைப்பை பெறுவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே கர்நாடகத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் இணையதளச் சேவையை வழங்க முன் வந்துள்ளோம்.
ரூ. 333 விலையில் 3ஜி டேட்டா 30 ஜிபி வரை 30 நாள்களுக்கு வழங்கப்படும். இதனை 2ஜி, 3ஜி, 4ஜி செல்லிடப்பேசி வசதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
30 ஜிபியை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, நாள் ஒன்றுக்கு இவ்வளவு சேவை என்ற கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.