"ஏழை மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க நடவடிக்கை'

ஏழை மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்று பெங்களூரு ஸ்கூல் ஸ்போர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் எல்விஸ் ஜோஸப் தெரிவித்தார்.

ஏழை மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்று பெங்களூரு ஸ்கூல் ஸ்போர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் எல்விஸ் ஜோஸப் தெரிவித்தார்.
 சிறப்பாக விளையாடும் ஏழை மாணவர்களுக்கு வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் வாய்ப்பு பெற்றுதரும் முயற்சியாக, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியை தொடக்கி வைத்து அவர் பேசியது:
 அனைத்து விளையாட்டுகளிலும் செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் விளையாட்டுகளில் திறமை உள்ள ஏழை மாணவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பெங்களூரு மேஜிக் பீட் கால்பந்து மையத்துடன் புரிந்துணர்வு செய்து கொண்டுள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் திறமையுள்ள ஏழை மாணவர்களை அடையாளம் கண்டு, வெளிநாடுகளில் உள்ள கால்பந்து போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com