பெங்களூரு கன்டீருவா உள்விளையாட்டு அரங்கில் ஜூன் 21-இல் நடைபெறும் 3-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா கலந்து கொள்கிறார்.
கர்நாடக மாநில ஆயுஷ் துறை சார்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், முதல்வர் சித்தராமையா கலந்துகொள்கிறார்.
மேலும், பல்வேறு சங்கங்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.