பெங்களூரில் ஜூலை 8- ஆம் தேதி மகாகவி பாரதியாரின் இசை நாடகம் தமிழில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து மகாகவி பாரதியாரின் நாடகக்குழு வெளியிட்டுள்ள செய்தி: இந்தியாவின் தலைசிறந்த தேசியவாதியும், மகாகவியும், சமூக சீர்திருத்தவாதியுமான பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை எண்ம தொழில்நுட்ப இசைக் கோர்வையோடு தமிழ் நாடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, அல்சூர் அருகேயுள்ள கங்காதர்செட்டி சாலையில் உள்ள ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடத்தில் ஜூலை 8- ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பாரதியார் இசை நாடகமாக அரங்கேற்றப்பட இருக்கிறது. இந்த நாடகத்தை காண ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8454011793 என்ற செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.