கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 5-ஆம் தேதி தொடங்குகிறது.
பெங்களூரு விதான செüதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக சட்டப்பேரவையில் 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. இத் தொடரின் அடுத்த கூட்டத் தொடர் ஜூன் 5 முதல் 16-ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நடத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் முழுமையாக நிறைவேற்றப்படும். மேலும், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும். சட்ட விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.