காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் திருட்டு

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ஊரகம் நெலமங்கலா அருகே உள்ள வாஜரஹள்ளியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் வியாழக்கிழமை பிற்பகல் பீன்யா காவல் சரகத்தில் உள்ள வங்கி ஒன்றில் ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்து, தனது காரில் வைத்துள்ளார்.
பின்னர், பகல்குண்டேயில் உள்ள வங்கி ஒன்றில் சொத்துவரி செலுத்துவதற்காக உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, காரிலிருந்த ரூ. 5 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்றவர்களை பகல்குண்டே போலீஸார் தேடி வருகின்றனர்.
வீடுகளில் புகுந்து தங்க நகை திருட்டு
பெங்களூரு, மே 19:  இரு இடங்களில் வீடுகளில் புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு குமாரசாமி லேஅவுட் பிகாசிபுரா 8-வது குறுக்குச் சாலையைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவியுடன் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி வந்தார்.
இதனிடையே, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸார் விசாரிக்கின்றனர். இதேபோல, ஓஎம்பிஆர் லேஅவுட் 6-வது பி குறுக்குச் சாலையைச் சேர்ந்தவர் ரகுநாராயணன். இவர் மே 5-ஆம் தேதி குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, வியாழக்கிழமை வீட்டிற்குத் திரும்பி வந்தார்.  இதற்கிடையே அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ ரூ. 2.15 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com