சுரங்க முறைகேடு: ஜனார்த்தன ரெட்டியிடம் சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரணை

சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிரான ஆதாரங்களை அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வுப் படையினர் முன் ஆஜரானார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிரான ஆதாரங்களை அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வுப் படையினர் முன் ஆஜரானார்.
ஜந்தகல் சுரங்க முறைகேடு தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் வியாழக்கிழமை சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், ஜந்தகல் சுரங்க முறைகேட்டில் குமாரசாமி ரூ. 150 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியிடம் விசாரணை நடத்த ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுப் படை அனுப்பியிருந்த சம்மனை ஏற்று, வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வுப் படையினர் முன் ஜனார்த்தன ரெட்டி ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜந்தகல் சுரங்க முறைகேடு குறித்து என்னிடமிருந்த தகவல்களை சிறப்பு புலனாய்வுப் படையினரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com