பெனுகொண்டா, மட்டிகெரா ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் மே 27-ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
கே.எஸ்.ஆர். பெங்களூரு- புதுதில்லி- கே.எஸ்.ஆர். பெங்களூரு விரைவு ரயில் ( ரயில் எண்கள் 12627, 12628 ) இரு மார்க்கங்களிலும் சோதனை முயற்சியாக மே 27-ஆம் தேதி முதல் தாற்காலிகமாக 6 மாதங்களுக்கு பெனுகொண்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதேபோல், கச்சகோடா-யஸ்வந்தபுரம்-கச்சகோடா விரைவு ரயில்கள் (ரயில் எண்கள்-17603, 17604) இரு மார்க்கங்களிலும் சோதனை முயற்சியாக மே 27-ஆம் தேதி முதல் தாற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டிகெரா ரயில்நிலையத்தில் நின்று செல்லும்.
இந்தத் தகவல் தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.