காளை முட்டியதில் இளைஞர் சாவு

மஞ்சு விரட்டும் போட்டியின்போது காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் இறந்தார்.

மஞ்சு விரட்டும் போட்டியின்போது காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் இறந்தார்.
சிவமொக்கா மாவட்டத்துக்குள்பட்ட ஆயனூருவில் தடையை மீறி மஞ்சு விரட்டும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.  அப்போது,  வேடிக்கை பார்க்கச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (29)  என்பவரை காளை ஒன்று முட்டியது.  இதில் பலத்த காயமடைந்த அவர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com