மஞ்சு விரட்டும் போட்டியின்போது காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் இறந்தார்.
சிவமொக்கா மாவட்டத்துக்குள்பட்ட ஆயனூருவில் தடையை மீறி மஞ்சு விரட்டும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வேடிக்கை பார்க்கச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (29) என்பவரை காளை ஒன்று முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.