6,000 துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம்: அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 6 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 6 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை மஜத உறுப்பினர் மது பங்காரப்பாவின் கேள்விக்குப் பதிலளித்து அவர் கூறியது:
மாநிலத்தில் தூய்மையைப் பராமரிப்பது முக்கியமாகும். அதற்கு உறுதுணையாக துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, காலியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 6 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட 1,129 பணியிடங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிரப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com