பெங்களூரு- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் சேவை

பெங்களூரிலிருந்து நிஜாமுதீன் இடையே கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து நிஜாமுதீன் இடையே கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரில்(யஷ்வந்த்பூர்)இருந்து நிஜாமுதீன்(தில்லி) ரயில் நிலையத்திற்கு கூடுதல் கட்டணத்துடன்கூடிய சிறப்பு ரயில் அக்.10-ஆம் தேதி இயக்கப்படுகிறது.
 ரயில் எண்-02649-பெங்களூரு (யஷ்வந்த்பூர்)-நிஜாமுதீன் சிறப்பு விரைவுரயில் அக்.10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)பெங்களூரு-யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
 இந்த ரயில் பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு தர்மாவரம், கர்னூர் டவுன், கச்சேகுடா, பல்லர்ஷா, நாக்பூர், போபால் வழியாக நிஜாமுதீன் ரயில்நிலையத்தைச் சென்றடைகிறது. ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 8 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் உள்ளிட்ட 16 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 ரயில் சேவை ரத்து
 ரயில் எண்-12552-காமாக்கியா-யஷ்வந்த்பூர் அதிவிரைவுரயில், காமாக்கியாவில் இருந்து அக்.11-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, ரயில் எண்-12551-யஷ்வந்த்பூர்-காமாக்கியா அதிவிரைவுரயில், யஷ்வந்த்பூரில் இருந்து அக்.14-ஆம் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com