5 நாள்கள் பரோல் நிறைவு: சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

ஐந்து நாள்கள் பரோல் முடிந்த நிலையில் அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்கு புறப்பட்டார்.
5 நாள்கள் பரோல் நிறைவு: சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

ஐந்து நாள்கள் பரோல் முடிந்த நிலையில் அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்கு புறப்பட்டார்.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த பிப்.15 முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அக்.4-ஆம் தேதி சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக 233 நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு, 5 நாள்கள் பரோலில் கடந்த அக்.6-ஆம் தேதி கார் மூலம் சசிகலா சென்னைக்குச் சென்றிருந்தார்.

சென்னைக்குச் செல்லவும், பெங்களூருக்குத் திரும்பவும் தலா ஒரு நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், அக்.7-ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் பரோல் காலம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, அக்.11-ஆம் தேதி பரோல் காலம் நிறைவுபெற்றது. இந்நிலையில் அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா கார் மூலம் பெங்களூரில் உள்ள மத்திய சிறைக்கு புறப்பட்டார். மாலை 4 மணிக்கு முன்பாக அவர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைக்குச் செல்வார் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com