கோரமங்களா காவல் நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு கோரமங்களா காவல் நிலையத்தில் அக். 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.