ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் வருமாறு(பழைய பொறுப்பு அடைப்புக்குறிக்குள்) :  பி.ரவிக்குமார்-கூடுதல் தலைமைச் செயலாளர், மின் துறை(கூடுதல் தலைமைச் செயலாளர், வனத் துறை), ரஜ்னீஷ்கோயல்-கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை (கூடுதல் தலைமைச்செயலாளர், மின் துறை).
 அஜய்சேத்-கூடுதல் தலைமைச் செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை(கூடுதல் தலைமைச்செயலாளர், கல்வித்துறை), ஷாலினி ரஜ்னீஷ்-முதன்மைச்செயலாளர், கல்வித்துறை(முதன்மைச்செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை), ஜி.சி.பிரகாஷ்-மேலாண் இயக்குநர், மைசூரு விற்பனை மற்றும் பன்னாட்டு நிறுவனம்(ஆணையர், மூங்கிவளர்ச்சித்துறை; இயக்குநர், சர்க்கரைத் துறை).
கே.எஸ்.மஞ்சுநாத்-மேலாண் இயக்குநர், கர்நாடக கைத்தறி வளர்ச்சிக் கழகம்(பணி காத்திருப்பு), ரித்விக் ரஞ்சனம் பாண்டே-நிதித்துறை(ஆணையர், வணிகவரித்துறை), ஸ்ரீகர்-ஆணையர், வணிகவரித்துறை(மேலாண் இயக்குநர், கர்நாடக குடிபானங்கள் கழகம்), ஜெகதீஷா-இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை(தென்கன்னட மாவட்ட ஆட்சியர்), எஸ்.சசிகாந்த் செந்தில்-தென் கன்னட மாவட்ட ஆட்சியர்(இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை) என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com