கடமை தவறியதாக பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் சரக மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் சரக மாநகராட்சி தலைமைப் பொறியாளராக பணியாற்றி வருபவர் நாகராஜ். இவரது அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாக நிலைக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் நாகராஜ் கடமை தவறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத், நாகராஜை பணியிடை நீக்கம் செய்தார்.