பெங்களூரில் இரு இடங்களில் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் சிங்கா (28). இவர் பசவனகுடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் எலக்ட்ரானிக்சிட்டி 2-ஆவது பேஸ் அருகே சென்று கொண்டிருந்தார்.தமிழ்நாடு அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த சிவக்குமார் சிங்கா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பெங்களூரு விஜயநகர் பைப்லைனைச் சேர்ந்த முகமது ஃபாருக் (36) தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மைசூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆயுதப் படை பயிற்சி திடல் அருகே மாநகரப் பேருந்து மோதியதில் முகமது ஃபாரூக் நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிக்பேட்டை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.