கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16-ஆம் தேதி விதான செளதாவில் நடைபெறுவதையொட்டி அப் பகுதியை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் பிப். 16-ஆம் தேதி தொடங்கி பிப். 28-ஆம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதையொட்டி பிப். 16-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப். 28-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதான செளதாவை சுற்றி 2 கி.மீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடி பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.