jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

பசியில்லா மாநிலத்தை  உருவாக்கவே அன்னபாக்யா திட்டம்:  காங்கிரஸ்

By DIN  |   Published on : 13th January 2018 07:32 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பசியில்லா மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் அன்னபாக்யா, இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் செயலாளர் மதன்பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு சி.வி.ராமன் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு அரிசி, வெல்லம், நெய், சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: 
அனைத்து மொழிகள் பேசுபவர்களும் சகோதரர்களாக இணைந்து வாழும் மாநிலம் என்ற பெருமை கர்நாடகத்தையே சேரும். இங்கு தமிழர்களும், கன்னடர்களும், தெலுங்கர்களும் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகத்தில் சங்கராந்தி என்றும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றும் கொண்டாடப்படுகிறது. 
தைத்திருநாளை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். சி.வி.ராமன் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதிலும் கூலித் தொழிலாளி உள்ளிட்ட ஏழைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை மட்டுமன்றி, மாநிலத்தில் வாழும் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்பதே முதல்வர் சித்தராமையாவின் நோக்கம். பசிக்கு மட்டுமே ஜாதி, மத, இன, மொழி பேதம் கிடையாது. பசியில்லா மாநிலமாக கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அன்னபாக்யா, இந்திரா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 
முதல்வர் சித்தராமையாவின் வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. எங்களின் வேண்டுகோளை ஏற்று, பெங்களூரு சி.வி.ராமன் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எம்.சி.மகாதேவப்பா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட ஒப்புக் கொண்டுள்ளார் என்றார். 
நிகழ்ச்சியில் சட்ட மேலவை உறுப்பினர் நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜலன்நிகிலி, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்