பொங்கல் பண்டிகை:  முதல்வர் சித்தராமையா வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, கர்நாடக மக்களுக்கு முதல்வர் சித்தராமையா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கர்நாடக மக்களுக்கு முதல்வர் சித்தராமையா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: 
கன்னடர், தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என அனைத்து மக்களும் ஒன்றுமையாக இணைந்து வாழும் மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. கர்நாடக மக்கள் சங்கராந்தி என்ற பெயரிலும், தமிழர்கள் பொங்கல் என்ற பெயரில் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். 
குறிப்பாக கிராமங்களில் உள்ள விவசாயிகள், மகளிர் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது. பொங்கலன்று கிராமங்களில் உள்ள வீடுகளில் கரும்பு, வண்ண கோலங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு இப் பண்டிகையை வரவேற்பர்.
வீடுகளில் ஒருபக்கம் விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருகள், மறுபக்கம் அலங்கரிக்கப்பட்ட பசு, காளைகள் உள்ளிட்ட கால்நடைகள் என விவசாயிகள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். உழைத்த கால்நடைகளைக் கொண்டாடும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்தில் வைக்கோல்களில் வைக்கப்பட்ட தீயை கால்நடைகள் தாண்டுவதன் மூலம் அவைகள் சுறுசுறுப்பு அடைக்கின்றன என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே உள்ளது. பெண் பிள்ளைகள் புத்தாடை அணிந்து எள்ளு,வெல்லத்தை உறவினர்களுக்கம், நண்பர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. 
ஜாதிகளைக் கடந்து பொங்கலை கொண்டாடும் மாநிலத்தில் வாழும் அனைத்து மக்கள், குறிப்பாக விவசாயிகள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்பதே எனது ஆழ்மனதின் வாழ்த்துகளும், ஆசைகளும் என அதில் தெரிவித்துள்ளார்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com