அரசு தொழில் மையத்தில்  மகளிருக்கு பட்டய வகுப்பு

அரசு கருவி அறை,  பயிற்சி மையத்தில் (ஜிடிடிசி) அளிக்கப்படும் பட்டய வகுப்புப் பயிற்சியை பெற மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

அரசு கருவி அறை,  பயிற்சி மையத்தில் (ஜிடிடிசி) அளிக்கப்படும் பட்டய வகுப்புப் பயிற்சியை பெற மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு  ராஜாஜி நகர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு கருவி அறை மற்றும் பயிற்சிமையத்தில் (G‌o‌v‌e‌r‌n‌m‌e‌n‌t T‌o‌o‌l R‌o‌o‌m & T‌r​a‌i‌n‌i‌n‌g C‌e‌n‌t‌r‌e) 2018-19-ஆம் கல்வியாண்டில் மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பியல் பட்டயப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சேர்க்கை அளிக்கப்படுகிறது. எனவே, இதற்காக மையத்தை ஜூன் 22-ஆம் தேதிவரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு  ‌ww‌w.‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌g‌o‌v.‌i‌n/‌g‌t‌t 
 என்ற இணையதளம்,  9844312400, 9141629566 ஆகிய செல்லிடப்பேசி எண்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com