அரசு கருவி அறை, பயிற்சி மையத்தில் (ஜிடிடிசி) அளிக்கப்படும் பட்டய வகுப்புப் பயிற்சியை பெற மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு ராஜாஜி நகர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு கருவி அறை மற்றும் பயிற்சிமையத்தில் (Government Tool Room & Training Centre) 2018-19-ஆம் கல்வியாண்டில் மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பியல் பட்டயப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சேர்க்கை அளிக்கப்படுகிறது. எனவே, இதற்காக மையத்தை ஜூன் 22-ஆம் தேதிவரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு www.karnataka.gov.in/gtt
என்ற இணையதளம், 9844312400, 9141629566 ஆகிய செல்லிடப்பேசி எண்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.