"மதவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்'

மதவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என கர்நாடக மாநில அரசியல் சாசன பாதுகாப்பு போராட்டக் குழுவின் தலைவர் ஏ.கே.சுப்பையா தெரிவித்தார்.

மதவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என கர்நாடக மாநில அரசியல் சாசன பாதுகாப்பு போராட்டக் குழுவின் தலைவர் ஏ.கே.சுப்பையா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாட்டின் விடுதலைக்காக நலிந்த சமூகங்களில் சார்பாக போராடிய முக்கிய தலைவர்களின் ஒருவர் அம்பேத்கர். அவர் உருவாக்கிய அரசியல் சாசனம் சர்வதேச அளவில் சிறந்ததாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், அதனை பிரதமர் நரேந்திர மோடி மீறி வருகிறார். அவர் ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது. மீண்டும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால் மதவாதத்திற்கு ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதவாதத்திற்கு எதிரான கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மதவாதக் கட்சிகளை தோற்கடித்தால் மட்டுமே ஜனநாயகம் தழைக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com