"கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டம்'

கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மோட்டரோலா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதீன் மாத்தூர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மோட்டரோலா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதீன் மாத்தூர் தெரிவித்தார்.
பெங்களூரில்  புதன்கிழமை மோட்டோஹப்பை தொடக்கிவைத்து பேசியது: சர்வதேச அளவில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். 
பெங்களூரில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில்  இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. எனவே, பெங்களூரிலும், கர்நாடகம் முழுவதிலும் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com