கர்நாடகத்தில் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மோட்டரோலா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதீன் மாத்தூர் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை மோட்டோஹப்பை தொடக்கிவைத்து பேசியது: சர்வதேச அளவில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரில் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. எனவே, பெங்களூரிலும், கர்நாடகம் முழுவதிலும் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.