பெங்களூரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் மிரட்டி பணத்தை பறித்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பேட்டராயனபுராவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (24), வினோபாகாலனியைச் சேர்ந்தவர்கள் மஞ்ஜேஷ் (24), நாகராஜ் (24), ஹாவளஹள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (24), ஹனுமந்தநகரைச் சேர்ந்தவர் சசிகுமார் (24).
இவர்கள் 5 பேரும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிரிநகர் காவல் சரகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிவக்குமார் என்பவர் மீது காரை மோதி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அவருடன் தகராறில் ஈடுபட்டு, காரில் கடத்திச் சென்று ரூ. 10 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
கிரிநகர் காவல் நிலையத்தில் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட சிவக்குமார், மஞ்ஜேஷ், நாகராஜ், சீனிவாஸ், சசிகுமார் ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து கார், அரிவாள், கத்தி, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.