ஹோட்டல் தொடங்குவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
பெங்களூரு மாநகரில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டப்படுவதாக மாநகராட்சி அதிரடிப்படை அலுவலகத்துக்கு வந்த புகார் தொடர்பாக விசாரணை செய்ய மாநகராட்சி அதிரடிப் படை அதிகாரி சிவக்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை செய்ய, புகார் அளித்தவரிடம் ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். புதன்கிழமை ரூ. 20 ஆயிரத்தை முன்பணமாக உதவியாளர் சேதன் என்பவர் மூலமாக சிவக்குமாருக்கு கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவர்கள் இருவரையும் பிடித்து கைது செய்தனர்.