விபத்தில்  முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதியதில், முதியவர் இறந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில், முதியவர் இறந்தார்.
பெங்களூரு கே.ஆர்.புரம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் வீரய்யா (65). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை ஹொசகோட்டை சாலை மேடஹள்ளி மேம்பாலத்தின் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com