இன்று குடிநீர் குறைதீர் முகாம்

நகர கிழக்கு 2-ஆம் துணை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

நகர கிழக்கு 2-ஆம் துணை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை குடிநீர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு 2-ஆம் துணை மண்டலத்தில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட், ஹூடி, புவனேஸ்வரி நகர், பெமல் லேஅவுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குடிநீர் குறைதீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945115.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com