பெங்களூரு-பெலகாவி இடையே சிறப்பு விரைவு ரயில் சேவை

தசரா விழாவையொட்டி பெங்களூரு- பெலகாவிக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தசரா விழாவையொட்டி பெங்களூரு- பெலகாவிக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தசரா பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில் (யஷ்வந்தபூர்) இருந்து பெலகாவிக்கு தட்கல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண்-06581-பெங்களூரு (யஷ்வந்த்பூர்)-பெலகாவி தடகல் சிறப்பு விரைவு ரயில் அக். 17-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. 
மறு மார்க்கத்தில், ரயில் எண்-06582-பெலகாவி-பெங்களூரு (யஷ்வந்த்பூர்) தட்கல் சிறப்பு விரைவு ரயில் அக். 21-ஆம்தேதி மாலை 5.20 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்தபூர்) ரயில்நிலையம் வந்தடைகிறது. 
இந்த ரயில் இருமார்க்கத்திலும் தும்கூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ஹாவேரி, ஹுப்பள்ளி, தார்வாட், லோண்டா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொது பெட்டிகள் 14, சரக்கு மற்றும் ஓய்வறை கொண்ட 2 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com