மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு கங்காநகரைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மனைவி சுரேகா (30). இவர்களது பெண் குழந்தை ஆராத்யா (3). ஹோட்டல் நடத்தி வந்த ராகவேந்திரா, வியாழக்கிழமை இரவு தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் நண்பரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஹெப்பாள் வெளிவட்டச்சாலையில் லும்பினிகார்டன் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேகா, குழந்தை ஆராத்யா ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர்.
காயமடைந்த ராகவேந்திரா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹெப்பாள் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை வருகின்றனர்.