பெங்களூரில் அக்.1-இல் தொடங்கும் 2 மாத கணினி பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பிரஜனா கணினி பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கை:
பிரஜனா கணினி பயிற்சி மையம் சார்பில் ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அக்.1 முதல் நவ.30-ஆம் தேதி வரை இலவச கணினி அறிவியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பியூசி, பட்டயப் படிப்பு படித்த, 18 வயது முதல் 35 வயதுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை கனரா வங்கியின் தலித், பழங்குடியின ஊழியர்கள் நலச் சங்கம், ஜீவன்பீமாநகர் மற்றும் எண். 16, 2-ஆம் மாடி, பூர்ணிமா திரையரங்கம், 2-வது குறுக்குச்சாலை, கே.சி.சாலை, பெங்களூரு-560027 என்ற முகவரில் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 080-22132649, 9986104033 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.