பெங்களூரில் போதைப்பொருள் விற்றதாக நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் ஹென்றி சிக்போ(34). இவர், பெங்களூரு கே.ஆர்.புரம் டி.சி.பாளையா பிரதானசாலை கார்டன் கல்லூரி அருகே புதன்கிழமை போதைப்பொருள் விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று ஹென்றி சிக்போவைக் கைது செய்து, ரூ. 8.5 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் கோகைன், இரு சக்கர வாகனம், 3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.