விநாயகர் ஊர்வலம்: போக்குவரத்தில் மாற்றம்

விநாயகர் ஊர்வலத்தையொட்டி புலிகேசிநகர் உள்ளிட்ட காவல் சரகங்களில் சனிக்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலத்தையொட்டி புலிகேசிநகர் உள்ளிட்ட காவல் சரகங்களில் சனிக்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு வட மண்டலத்தில் உள்ள  ஜே.சி.நகர், ஆர்.டி.நகர், ஹெப்பாள், சஞ்சய்நகர் மற்றும் கிழக்கு மண்டத்தில் உள்ள 
கே.ஜி.ஹள்ளி, டி.ஜி.ஹள்ளி, புலிகேசிநகர், பாரதிநகர் ஆகிய காவல் சரகங்களில் சனிக்கிழமை கூட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி புலிகேசிநகர் நகர் உள்ளிட்ட காவல் சரகங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரின் வழிக்காட்டுதலின்படி மாற்றுப்பாதையில் வாகன ஓட்டிகள் சென்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com