தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஹொசகெரேஹள்ளியைச் சேர்ந்தவர் மகாதேவ் (31), நாகர்பாவியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (33). இவர்கள் இருவரும் தங்களை தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் என கூறிக் கொண்டு, முன்னணி நிறுவனங்களின் ஜவுளி விற்பனையை தங்களின் தொலைக்காட்சியில் பிரசுரம் செய்வதாக, ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், மகாதேவ், அசோக்குமாரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பனசங்கரி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.