செப். 27-ஆம் தேதி ஜாலஹள்ளி போக்குவரத்து காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு ஜாலஹள்ளி போக்குவரத்து காவல் நிலையத்தில், செப். 27-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத 10 ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ உள்பட 11 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22943020 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.