நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ராஜாஜி நகர் 12-ஆவது முக்கியச் சாலையைச் சேர்ந்தவர் உஜ்வலா. இவர் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரது கழுத்திலிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்றாராம். இதுகுறித்து ராஜாஜி நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.