மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

பல்லவர் கால சிற்பக் கலைக்கு சான்றாகத் திகழும் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் வந்திருந்தனர்.
பழைய கலங்கரை விளக்கத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
பழைய கலங்கரை விளக்கத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

பல்லவர் கால சிற்பக் கலைக்கு சான்றாகத் திகழும் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் வந்திருந்தனர்.

உலக அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்துக்கு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்படும். அதன்படி, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, பழைய, புதிய கலங்கரை விளக்கம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே சிறிய அளவில் விற்கப்படும் பல்வேறு சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com