பல்லவர் கால சிற்பக் கலைக்கு சான்றாகத் திகழும் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் வந்திருந்தனர்.
உலக அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்துக்கு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகக் காணப்படும். அதன்படி, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, பழைய, புதிய கலங்கரை விளக்கம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே சிறிய அளவில் விற்கப்படும் பல்வேறு சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் சென்றனர்.