காதலி எரித்துக் கொலை: காதலன் தற்கொலை

திருமுல்லைவாயலில் காதலியை எரித்து கொன்றுவிட்டு, காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமுல்லைவாயலில் காதலியை எரித்து கொன்றுவிட்டு, காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் புதூர் பானு நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (21). லெனின் நகரைச் சேர்ந்த வர் மைதிலி (20). அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பார்த்திபனுக்கு கால் முறிந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன், பார்த்திபன் மைதிலியைச் சந்தித்து பேச முயன்றார். ஆனால், அவர் பார்த்திபனுடன் பேச மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிகிழமை இரவு மைதிலி வேலை சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருமுல்லைவாயல் விவேகானந்தர் நகரில் வந்தபோது, அங்கு மண்ணெண்ணெய் கேனுடன் பார்த்திபன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக மைதிலியிடம் கூறினாராம்.
இதனை பொருட்படுத்தாமல் மைதிலி அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த பார்த்திபன், தான் வைத்திருந்த மண்ணெண்ணையை மைதிலி மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர், தானும் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்தார்.
இவர்களது அலறல் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைத்து இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சனிக்கிழமை அதிகாலை பார்த்திபனும், மைதிலியும் இறந்தனர்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் டில்லிபாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com