பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் 29-இல் அட்சய திருதியை விழா

சென்னை பெசன்ட் நகர் மகாலட்சுமி திருக்கோயிலில் அட்சய திருதியை விழா வரும் 29-இல் நடைபெற உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் மகாலட்சுமி திருக்கோயிலில் அட்சய திருதியை விழா வரும் 29-இல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோயிலின் தக்கார் மற்றும் உதவி ஆணையாளர் மு.ஜோதிலட்சுமி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஒவ்வொரு திதியும் மகாலட்சுமிக்கு உரிய நாள்களாகும். பகவான் பரசுராமர் அவதரித்த நாள் மற்றும் குபேரன் மகாலட்சுமியிடம் ஐஸ்வர்யத்தைப் பெற்ற நாள் உள்பட பல சிறப்புகளைக் கொண்டது.
சித்திரை மாதம் சுக்கிலபட்ச திதி அதாவது அமாவாசை நாளிலிருந்து மூன்றாவது திதி வரக்கூடிய நாள் திருதியை திதி ஆகும். அவ்வகையில் அட்சய திருதியை வரும் 29-ஆம் தேதி வருகிறது.
இந்நாளில் மகாலட்சுமியை வழிபாடு செய்வோருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும். அதனால் லட்சுமி வாசம் செய்யும் வெள்ளி உள்ளிட்ட பொருள்களை வாங்குகின்றனர்.
அன்றைய நாளில் அனைத்து உயிர்களும் சர்வ நலனும் பெற்று சிறக்கும் நோக்கத்துடன் சிறப்பு லட்சுமி குபேர ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் ஹோமத்தில் வைத்து பூஜை செய்த மங்கலப் பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com