சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தரமணியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்தனர்.
அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை வெங்கடேசன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தச் சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர்