கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தீமைகள் அழிந்து பல நல்ல உபதேசங்கள் மூலம் மனித குலத்தை செம்மைப்படுத்திய கிருஷ்ணரின் அவதார தினம். இந்நன்னாளில் பாஜகவினர் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று ஆனந்தமுடன் வாழ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தமிழிசை தெரிவித்துள்ளார்.